மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமலின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா குமார். ஆனால் உத்தம வில்லன், விஸ்வரூபம்-2 என கமலின் படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த படமும் கைவசம் இல்லாத நிலையில் மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளாராம் பூஜா குமார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில், ஏற்கனவே மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதை இது. இதில் தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூஜா குமார்.
அதுமட்டுமல்ல, இந்தியில் நான்கு குறும்படங்களை இணைந்து ஆந்தாலாஜி படமாக உருவாகும் 'தி இன்விசிபில் மாஸ்க்' என்கிற படத்தில் ஒரு குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்க, அதில் நாயகியாக பூஜா குமார் தான் நடித்துள்ளாராம்.