இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துளசி "சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை மாநில முதல்வர் பிரணாய் விஜயனுக்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும்" என்ற பேசினார்.
இந்த பேச்சு கேராளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் அமைப்பினர் போ£ராட்டம் நடத்தினர். இதுகுறித்து கொல்லம் துளசி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் பேசியது மிகவும் தவறு அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.