திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டெஸ் ஜோசப் என்கிற பெண் இயக்குனர், மலையாள நடிகரான முகேஷ் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் முகேஷ் சேனல் ஒன்றில் கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தபோது, அதில் பணிபுரிந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார் டெஸ் ஜோசப்.
இந்த குற்றச்சாட்டு குறித்து முகேஷின் மனைவி மெத்தில் தேவிகா கூறும்போது, “என் கணவரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.. ஆனால் அவரோ அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறினார். வழக்கமாக அவர் என்னிடம் பொய் எதுவும் சொல்வதில்லை” என கூறியுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, தான் அப்படி நடந்து கொள்ளவே இல்லை என்று தான் கணவன்மார்கள் மனைவியிடம் சொல்வார்கள்.. இதில் நடிகர் முகேஷ் மட்டும் சற்றே வித்தியாசமாக அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறி புதுவிதமாக மனைவியை சமாளித்துள்ளார்.