'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மிகப்பெரிய அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் பினு இயக்கிய இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தப்படத்தின் வித்தியாசமான கதை தான்.
புராண காலத்தில் இருந்த இரண்டு மாய மோதிரங்கள் நிகழ்காலத்தில் ஒரே நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் விரல்களுக்கு வந்து சேர்கிறது. மோதிரத்தின் சக்தியால், இருவருக்குமான ஆண், பெண் தன்மை மட்டும் இடம் மாறிவிடுகிறது. அதன்பின் நிகழும் குழப்பங்களை சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார்கள்.
இந்தப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பினு. முதல் பாகத்தில் அறிமுக நடிகர் டாம் சாக்கோ நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார். இவர் அடுத்து தமிழில் வெளியாக உள்ள நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.