டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. மோகன்லால் பீமனாக நடிக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பப்பட்ட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளார்.
இந்தநிலையில் ரண்டமூழம் படத்தின் கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், அந்தப்படத்தை இயக்கவுள்ள ஸ்ரீகுமார் மேனன், தனது ஸ்க்ரிப்ட்டின் உரிமையை தன்னிடம் திருப்பி தரவேண்டும் என கோழிக்கோடு முன்சீப் கோர்ட்டை அணுகியுள்ளார்.
“இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் தான் தீவிரமாக பணியாற்றி, இதன் மலையாள மற்றும் ஆங்கில வசனங்களையும் எழுதிக்கொடுத்து ஒப்பந்தம் போட்டபோது, இந்தக்கதையை மூன்று வருடங்களுக்குள் படமாக்க வேண்டும் என ஒரு நிபந்தனையையும் குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது நான்கு வருடம் ஆகிவிட்டதாம். மூன்று வருடம் முடிந்தும், அதன்பின் ஒரு வருடம் வரை காத்திருந்து பார்த்த எம்.டி.வாசுதேவன் நாயர், படப்பிடிப்பு துவங்கப்படும் அறிகுறி எதுவும் தென்படாததால் கோபமாகித் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அதே இயக்குனர் தான் தற்போது மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..