பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அளவிற்கு அதிகமாக மது அருந்தி இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது ரத்ததில் மெத்தனால் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரிவித்தார்கள். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கலாபவன் மணியின் வாழ்க்கையை சாலக்குடிகாரன் சங்கதி என்ற பெயரில் இயக்குனர் வினயன் இயக்கினார். கடந்தவாரம் வெளிவந்த படம், தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கலாபவன் மணி நண்பர்களால் விஷம் வைத்து கொல்லப்படுவதாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது. வழக்கு முடியாத நிலையில், கலாபவன்மணி கொலை செய்யப்பட்டார் என்ற தீர்ப்பு வராத நிலையில் இப்படி காட்சி வைத்திருப்பது சி.பி.ஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இயக்குனர் வினயன், சி.பி.ஐ முன் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கொலை செய்யப்பட்டார் என்பது வினயன் கருத்தாக இருந்தால் கொலையாளிகளை அவருக்கு தெரிந்திருக்கும் என்று கருதி சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.