அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்த வாரம் மலையாளத்தில் 'லில்லி' என்கிற ஹாரர் த்ரில்லர் படம் வெளியானது. இதில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர் தான் சமீபத்தில் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் 'தீவண்டி' படத்திலும் கதாநாயகி. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நடிப்பில் மிகப்பெரிய வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.
லில்லி படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளார் சம்யுக்தா மேனன். இதற்காக சில நாட்கள் மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று கர்ப்பிணிகளின் நடவடிக்கைகளை கவனித்து அதை உள்வாங்கி நடித்தாராம். அதுமட்டுமல்ல, படத்தில் ரத்தம் படிந்த, சேறான, கிழிந்த நிலையிலான ஆடையுடனேயே 21 நாட்கள் தொடர்ந்து நடித்தாராம் சம்யுக்தா மேனன்.
இந்தப்படத்தில் கர்ப்பிணியாக, ஹாரர் கேரக்டரில் நடித்திருந்த இவரால் படப்பிடிப்பு முடிந்தபின்னும் அதன் பாதிப்பிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளியேவர முடியவில்லையாம். இதற்காக இவருக்கு சில நாட்கள் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு படிப்படியாகத்தான் அந்த கேரக்டரின் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடிந்தது என அவரே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.