ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் சமீபகாலமாக முன்னேறி வரும் இளம் நாயகி தான் ஐஸ்வர்ய லட்சுமி. வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட்டாக, சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் 'வரதன்' படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் இவர் ஆறு வருடங்களுக்கு முன் விளையாட்டாக செய்தது இப்போது இவருக்கு சங்கடத்தை தேடிக்கொண்டு வந்துள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் நடிகர் பிருத்விராஜ் நடித்த ஔரங்கசீப் படத்தில் இடம்பெற்ற இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு பிருத்விராஜை ராஜப்பன் (கரடு முரடானவன்) என குறிப்பிட்டு டேமேஜ் கண்டிசனில் இருக்கிறார் எனவும், அர்ஜுன் கபூரை பார்க்கவே ஆள் ஹாட் ஆக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் அர்ஜுன் கபூர் ரசிகையாம்..
ஆனால் அந்த பேஸ்புக் பதிவை யாரோ எடுத்து இப்போது சோஷியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார்கள். இதனால் கோபமான பிருத்விராஜ் ரசிகர்கள் ஐஸ்வர்ய லட்சுமியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். ஆனால் அது அப்போது ஏதோ விளையாட்டாக பண்ணியது, அதை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.