டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இந்தநிலையில் பிரபல இயக்குனரும் கலாபவன் மணியின் திரையுலக குருவுமான வினயன் 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கியுள்ளார்.
கலாபவன் மணிக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த சில ரகசியங்களை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் வினயன். குறிப்பாக, கலாபவன் மணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு பிரபல நடிகையை தனது படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதாகவும் அந்த நடிகை அவரது நிறத்தை காரணம் காட்டி அவரை ஒதுக்கியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் பத்து வருட காலம் கடந்தபின், அந்த நடிகையுடன் நடிக்காவிட்டாலும், அந்த நடிகைக்கு மவுசு குறையத் தொடங்கிய நேரத்தில் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம் கலாபவன் மணி.
மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த அந்த நடிகை யார் என்கிற உண்மையை இந்தப்படத்தில் உடைத்துள்ளாராம் வினயன். இது தெரிய வரும்போது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அத்ரிசியாக இருக்கும் என்றும் கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார் வினயன்.