ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் துல்கர்சல்மான், தற்போது பாலிவுட்டிலும் நுழைந்திருக்கிறார். இந்நிலையில் துல்கர்சல்மான் அளித்து ஒரு பேட்டியில், நான் சினிமா உலகில் எனது தந்தை மம்மூட்டியின் பெயரை ஒருபோதும் பயன்படுத்த நினைத்ததில்லை. அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சபதம் எடுத்தபடிதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் சொந்த அடையாளத்தை உருவாக்கவே நான் விரும்புகிறேன். அதோடு, இப்போதும் எனது தந்தையுடன் அமர்ந்துதான் நான் நடிக்கும் படங்களை பார்க்கிறேன். என் நடிப்பை அவர் அரிதாகவே பாராட்டுகிறார். அதேசமயம், என் படங்களைப்பார்த்து விட்டு அவர் சிரித்துக்கொண்டே போனால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நான் கருதிக் கொள்கிறேன் என்கிறார் துல்கர் சல்மான்.