'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பேராயர் பிராங்கோ மூலக்ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராயர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரபல மலையாள குணசித்ர நடிகர் ஜோய் மேத்யூ தலைமையில் நேற்று மிட்டாயி இரவு பகுதியில் கண்டன பேரணி நடத்தினர்.
இந்த பகுதியில் ஊர்வலம், பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி ஜோய் மேத்யூ பேரணி நடத்தியதால் அவர் உள்ளட 24 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
"போலீசார் பேராயருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் தடை பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இப்போது வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்கிறார் ஜோய் மேத்யூ.