தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அமைப்பை துவங்கி அதன்மூலம் கேரளாவில் வெள்ள நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் கொச்சியில் வெலிங்டன் ஐலண்ட் பகுதியில் நிவாரண உதவிகளை பார்வையிட்டார். அப்போது அங்கே கூடியிருந்த நிருபர்களின் ஒருவர் சமீபத்தில் கேரளாவை அதிரவைத்த கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை பற்றி மோகன்லாலின் கருத்து என்ன என கேட்டார்.
இந்த கேள்வியால் கோபமான மோகன்லால், "இங்கே வெள்ள நிவாரண விஷயங்கள் நிறைய உள்ளன. அது தொடர்பாக கேட்பதை விட்டுவிட்டு இப்படி ஒரு தேவையில்லாத கேள்வியை என்னை பார்த்து கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லை. இதற்கும் கன்னியாஸ்திரி பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்..? கேரளாவையே சமீபத்திய வெள்ளம் சீர்குலைத்துள்ளது. நான் அதைப்பற்றி பேசினால் நீங்கள் தேவையில்லாமல் கன்னியாஸ்திரி விவகாரம் குறித்து கேட்கிறீர்கள் " என கேள்வி கேட்ட நிருபரிடம் கடுமை காட்டினார்.
மோகன்லாலின் இந்த பதில் பத்திரிகையாளர்கள் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் தான் இவ்வாறு கடுமையாக பேசியதில் உள்ள தவறை உணர்ந்த மோகன்லாலும், மறுநாளே (நேற்று) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒருநாள் கழிந்தபிறகும் அந்த நிகழ்வு என் மனதைவிட்டு நீங்கவில்லை. என்னுடைய வார்த்தைகள் சம்பந்தப்பட்ட நிருபரின் மனதை காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் மூத்த சகோதரனின் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளாக நினைத்து நீங்கள் அதை ஒதுக்கி விடுங்கள்.. யாரையும் எந்த ஒரு அமைப்பையும் என் வார்த்தைகளால் காயப்படுத்துவது என் நோக்கமல்ல.. உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என் கடமை" என வருத்தம் தெரிவித்துள்ளார் மோகன்லால்..