வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதித்தவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், அவரது வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார்..
இந்தப்படத்தில் செந்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினயன். சாலக்குடி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ஆட்டோ ஓட்டும் ஒரு காட்சியில் அச்சு அசலாக கலாபவன் மணியின் மேனரிசங்களுடன் நடித்தாராம் செந்தில் ராஜாமணி. உடனே அருகில் இருந்த சில ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்களாம்.
கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நண்பராக இருந்தவர்கள் தான் தங்களது நண்பனின் உருவமாக செந்தில் ராஜாமணியை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்களாம்.