தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் பிருத்விராஜ் நடித்த, அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், திலீப்புடன் நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர். இவர் தனது புதிய படத்தை திலீப்பை வைத்து இயக்குவதாக கடந்த வருடமே அறிவித்திருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நாதிர்ஷாவும், திலீப்பும், சேர்ந்து கேசு ஈ வீட்டிண்டே நாதன் என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது திலீப் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டுவிட்டது என பலரும் பேச துவங்க, அதில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்தப்படத்தில் திலீப் 90 வயது கிழவராக நடிக்க வேண்டியுள்ளதாம். சில மாதங்களுக்கு முன் வெளியான கம்மர சம்பவம் படத்திலும் திலீப், இதேபோல 90 வயதான கிழவராக நடித்திருந்தார் என்பதால், இதிலும் அப்படியே நடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று தான் திலீப் விலகினாராம். ஆனால் இந்தப்படத்தை நாதிர்ஷாவுடன் சேர்ந்து தயாரிப்பதில் இருந்து திலீப் விலகவில்லை. அதுமட்டுமல்ல, இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தில் இருவரும் இணைய உள்ளார்களாம்.