இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய காமமோகிதம் என்கிற நாவலை படமாக்க மறைந்த இயக்குனர் பரதன் உள்ளிட்டட சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருமே இந்த நாவலில் இடம்பெறும் ஜஜாலி மற்றும் சாகர தத்தன் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லாலை மட்டுமே கற்பனை செய்து வைத்திருந்தனர்.
அதேசமயம் கே.ஜி .ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் இருவரையும் வைத்து இதை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கினார்.. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. மறைந்த இயக்குனர் பத்ரன், இந்த இரண்டு கேரக்டர்களிலும் மோகன்லாலை நடிக்க வைத்து இந்தப்படத்தை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் முன்னோக்கி நகரவில்லை. இந்தநிலையில் மம்முட்டியும் இதன் நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணனும் இணைந்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி, இந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப்படம் தற்போது மம்முட்டியின் கைகளுக்கு மாறியுள்ளது உறுதியாகியுள்ளது.