ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் இணைகிறார். சிவ நிர்வாணா இயக்கும் இந்த படத்தில் மீண் டும் நாகசைதன்யா-சமந்தா இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை அறிவதிலும் சமந்தாவின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து சமந்தா ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும். எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு முதிர்ந்த காதல் கதையில் நடிக்க விரும்பினோம். அதுபோலவே ஒரு கதையை டைரக்டர் சிவ நிர்வாணா சொன்னதால் இந்த படத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
முக்கியமாக இந்த படத்தின் கதை இளம் தம்பதியரின் வாழ்க்கையின் உயர்வு-தாழ்வுகளை சொல்வதாக அமையும். அந்தவகையில், சுவாரஸ்யமாகவும், வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது குறித்த விசயங்களையும் இந்த படம் சொல்லப்போகிறது என்கிறார் சமந்தா.