ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் மோகன்லால் விரைவில் அரசியலில் குதிக்க இருக்கிறார் என்பதுது தான் கேரளாவில் இப்போதைய பரபரப்பு. கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்ற மோகன்லால், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதற்கு முன்பு பல தருணங்களில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரின் செயல்பாட்டையும் பாராட்டி வந்துள்ளார். அதனால் அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறார் என்ற செய்தி பரவியது.
"பாரதிய ஜனதா கட்சி வலுவாக காலூன்ற முடியாத மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதனால் அங்குள்ள திரைப்பட நட்சத்திரங்களை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கிறது. தமிழ்நாட்டில் ரஜினி, கேரளாவில் மோகன்லால் என்பது தான் பா.ஜ.கவின் டார்கெட்" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கிடையில் வருகிற பாரார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் மோகன்லால் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை மோகன்லால் வலுவாக மறுக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறும்போது ''பா.ஜனதா சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அறக்கட்டளை நடத்தும் விழாவுக்கு அழைப்பு விடுக்கவே பிரதமரை சந்திதேன். எனது வேலையை செய்ய விடுங்கள்'' என்றார்.