ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பெங்காலி நடிகை பாயல் சக்ரவர்த்தி. சினிமாவில் நடித்து வந்த பாயல், சமீபகாலமாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பாயல், சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றின் தொடர் படப்பிடிப்புக்காக கேங்டாக் செல்ல இருந்த அவர், அதற்கு வசதியாக சிலிகுரியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று அவர் அறையை காலி செய்யும் நேரம் கடந்த பிறகும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை தட்டியும் திறக்காததால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது பாயல் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவாகரத்துக்கு பிறகு கடும் மன அழுதத்தில் இருந்த பாயல் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.