இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் சுமார் 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட பிருத்விராஜ், முதமுறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து, மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். மழை, வெள்ளம் காரணமாக சில நாட்கள் தடைப்பட்டிருந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருவனந்தபுரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் மோகன்லால். நேற்று மோகன்லால் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் நடந்து வருவது போன்ற காட்சியை படமாக்கினார் பிருத்விராஜ். இந்த காட்சியில் மோகன்லாலின் பின்னால் அணி திரளும் கூட்டம் வேண்டும் என்பதற்காக மோகன்லாலின் 2000 ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு இந்த காட்சியை படமாக்கி உள்ளனர்.