ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியது சமீபத்தில் பெய்த மழையும் அதனை தொடர்ந்த பெரு வெள்ளமும். ஒருபக்கம் பொதுமக்கள் நிவாரண நிதி அளிக்க, இன்னொரு பக்கம் மொழி பேதம் பாராமல் திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கினார்கள்.
இதில் தமிழகத்தில் இருந்து லாரன்ஸ் ஒரு கோடி வழங்கிய நிலையில் தெலுங்கில் இருந்து பிரபாஸ் ஒரு கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். ஆனால் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் குறைவான லட்சங்களில் மட்டுமே நிதி வழங்கியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரளா செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதை குறிப்பிட்டு, "நம் ஊரில் நான்கு கோடி சம்பளம் வாங்குபவர்களுக்கு கூட சொந்த ஊருக்கு செய்வதற்கு மனம் வரவில்லை. ஆனால் நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இங்குள்ள நடிகர்கள் இந்த விஷயத்தில் அவரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்" என மலையாள நடிகர்களை குறைசொல்லி பேசினார். இது திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.