ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிக்பாஸ் வீட்டிற்குள் போய்விட்டால் அதில் பங்குபெறும் போட்டியாளர்களின் உலகமே அதுதான் என்றாகி விடும். பிக்பாஸோ அல்லது போட்டி நடத்தும் கமலோ, மோகன்லாலோ ஏதாவது முக்கிய நிகழ்வு என்றால் மட்டும் போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமான தகவலை தமிழ் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
அதேபோல கடந்த இரண்டு வார காலமாக கேரளா மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது. ஆனால் இதுபற்றி மலையாள பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை தகவல் எதுவும் சொல்லாமல் இருந்தார்கள்.
அதேசமயம் இப்படி ஒரு மழை வெள்ளத்தில் கேரளா சூழப்பட்டுள்ளதை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லியாகவேண்டிய சூழல் உருவானதால், இந்த வாரம் மோகன்லால் கேரளாவின் உண்மை நிலவரம் பற்றி போட்டியாளர்களிடம் கூறினார்..
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போட்டியாளர்களை சாந்தப்படுத்திய மோகன்லால், ஒவ்வொரு போட்டியாளரையும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடச்செய்து அவர்கள் நலமாக இருப்பதை உறுதி செய்தார். தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய பிறகே போட்டியாளர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.