இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் பாலியல் உறவு கொண்டதாக பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது, ரெட்டி டைரி என்ற பெயரில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் ஒரு புகாரை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.
கடந்த மாதம் தெலுங்கில் வெளியான படம் ஆர்எக்ஸ் 100. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பயல் ராஜ்புத். அந்த படத்தின் வெற்றி காரணமாக தற்போது புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவர், பயல் ராஜ்புத்தை தனது படத்தில் நடிக்க வைக்க, தன்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் பயல் மறுத்துவிட்டார். இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பயல் ராஜ்புத்.