'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில மக்கள் உதவி வருகிறார்கள். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மழை வெள்ளம் காரணமாக மலையாள திரையுலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான 10 மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மாநிலமே பெரும் சோகத்தில் இருப்பதால் மக்கள் சினிமா கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள்.
இதனால் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இப்போதைக்கு படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் முடிந்த படங்கள் முதலீட்டுக்கு வட்டி கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள்.
அடுத்தடுத்த வெளிவர இருந்த மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால், நிவின்பாலி நடித்துள்ள காயங்குளம் கொச்சுண்ணி, பகத் பாசில் நடித்துள்ள வரதன் உள்ளிட்ட படங்களிக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஓணம் பண்டிகைக்குள் நிலமை சீராகாவிட்டால் ஓணம் பட வெளியீட்டிலும் மந்த நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது.