டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவில் அறிவுஜீவி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தனித்துவமான நடிகையாக அறியப்படுகிறார். பார்வதி ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நிச்சயம் நல்ல படமாக இருக்கும் என்கிற இமேஜ் இருக்கிறது. தமிழிலும் அப்படித்தான் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகியவை பார்வதி நடித்த படங்கள்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றிய கருத்துக்களை துணிச்சலுடன் கூறக்கூடியவர். பிரபல நடிகை கடத்தப்பட்டபோது அதற்கு எதிராக அதிகம் பேசியவரும் பார்வதி தான். மம்முட்டியைகூட கடுமையாக விமர்சித்தார். இதனால் லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும், எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். அன்பாக இருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.