வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா அரசு விருது வழங்கும் விழாவில் மோகன்லால் பங்கேற்க கூடாதது என விருதுக்கு தேர்வானவர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனாலும் கேரளா அரசு மோகன்லாலை அழைத்தது.. மோகன்லாலுடன் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுபெற்ற தீபேஷ் என்கிற இயக்குனர் மேடையேறி முதல்வரின் கையால் விருது பெற்றார். இவரும் அந்த எதிர்ப்பாளர்களின் ஒருவர் என்பதால் முதல்வர் அருகில் நின்றிருந்த மோகன்லாலிடம் ஒரு மரியாதைக்கு கூட கைகுலுக்கவில்லை.. மோகன்லால் நிற்பதையே இவர் கண்டுகொள்ளவில்லை.
அத்துடன் விட்டாரா..? தனது முகநூல் பக்கத்தில் "பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட யாரையும் நன் கட்டிப்பிடிக்கவோ கைகுலுக்கவோ விரும்பவில்லை.. அது கடவுளாக இருந்தாலும் கூட" என ஒரு பதிவும் இட்டுளார்.
இந்த இரண்டு செயல்களும் மோகன்லாலின் ரசிகர்களின் கோபத்தை தூண்டவே, சோஷியல் மீடியாவில் தீபேஷை வசைபாடி தீர்த்துவிட்டார்கள். இப்போது அவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார் தீபேஷ்.