ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசத்திற்குப்பின் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஒரு பகுதியாக சில வேலைகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு கடந்த பிப்ரவரி மாதம் அங்கமாலி நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. அதேசமயம் வீடியோக்கள் தவிர மற்ற சில ஆதாரங்களின் பிரதியை திலீப்பிற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றத்தில் திலீப் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதற்கு முன்னதாக அங்காமலி நீதிமன்றம் கூறிய அதே கருத்தை மேற்கோள் கட்டி திலீப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுபோக இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என திலீப் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.