சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கேரளாவில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் மம்முட்டி நேற்று முன்தினம் எர்ணாகுளம் வடக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அந்த பகுதி எம்.எல்.ஏவுடன் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, உதவி செய்வதற்கு தாங்கள் இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம் என தைரியமும் கூறினார்.
இந்தநிலையில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக தனது பங்காக 15 லட்சம் ரூபாயும் தனது மகனும் நடிகருமான துல்கர் சல்மானின் பங்காக 10 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளார். மொத்தம் இந்த 25 லட்ச ரூபாயை இன்று எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார் மம்முட்டி.