ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி தற்போது தெலுங்கில் யாத்ரா எனும் படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வளர்ந்துவரும் இளம் நடிகையும் மம்முட்டியுடன் ஒரு குட்டநாடன் பிளாக் என்கிற படத்தில் நடித்துள்ளவருமான அனு சித்தாரா, யாத்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மம்முட்டியை சந்தித்துள்ளார்..
இதுகுறித்து கூறியுள்ள அனு சித்தாரா, தெலுங்குப்படம் ஒன்றிற்காக கதை கேட்க ஐதராபாத் வந்ததாகவும், அப்போது மம்முட்டியின் யாத்ரா படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அங்கே சென்று மம்முட்டியை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்பில் மம்முட்டி மிக நீளமான தெலுங்கு வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டிருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.
மேலும் வசனங்களின் முழு அர்த்தத்தையும் கேட்டு அறிந்துகொண்டு ஸ்பாட்டில் சிங்கிள் டேக்கில் அசத்தியதையும் கண்டு, தான் பிரமித்து போனதாகவும் கூறியுள்ளார் அனு சித்தாரா.