டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகர் சங்கத்தில் சமீபத்தில் தலைவராக பொறுப்பேற்றார் மோகன்லால். அதையடுத்து நடிகை வழக்கில் சிக்கி கைதான நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகினார்கள்..
சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்டவர்கள் திலீப் விஷயத்தில் நடிகர் சங்கம் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நடிகர் சங்கமும் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. அதன்படி இன்று நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்ட மூவர் குழுவுடன் தலைவர் மோகன்லால் பேசசுவார்த்தை நடத்தினார்.
இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பெண்கள் நல அமைப்பினர் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என மோகன்லால் உறுதியளித்துள்ளார். அதேபோல நடிகர்சங்கத்துடன் இணைந்து செயல்படவே பெண்கள் நல அமைப்பு விரும்புவதாக நடிகை ரேவதியும் கூறியுள்ளார்.