தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்கு மொழிகள் தாண்டி, இந்தியா முழுதும் இருந்து அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும், கருணாநிதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மூத்த அரசியல்வாதி, திரையுலகின் ஜீனியஸ், சமூக நீதிக்காக போராடியவர், இதற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் கொண்டவர் இன்று நம்முடன் இல்லை. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நமது தலைமுறை இழந்து விட்டது. கலைஞரின் குடும்பத்தினருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என கூறியுள்ளார் மோகன்லால்.