'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சினிமா நட்சத்திரங்கள் நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதும் அதற்கு பெருங்கூட்டம் கூடுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில நேரங்களில் அதுவே சோகத்தில் முடிந்துவிடும் அபாயமும் உண்டு. நடிகர் துல்கர் சல்மான் நேற்று கேரளாவில் கொட்டராக்கராவில் புதிய மால் ஒன்றை திறந்துவைக்க வந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேமம் என்கிற பகுதியை சேர்ந்த ஹரிலால் என்கிற அந்த இளைஞர் துல்கர் சல்மானை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அவரது உயிர் வழியிலேயே பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
முன்னாள் டிஜிபி ஜேக்கப் பொன்னூஸ் என்பவர் நட்சத்திரங்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என துல்கரின் பெயரை குறிப்பிடாமல் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.