ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விளம்பர படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ராட்டையில் நூல் நூற்பது போன்று நடித்தார். இதற்கு கேரள மாநில காதி வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து கேரள காதி வாரிய தலைவர் ஷோபனா ராஜ் கூறியதாவது:
ராட்டை நமது தேசிய அடையாளம். காந்தியத்தின் அடையாளம். ராட்டை மூலம் காதி துணிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால் காதிக்கும், ராட்டைக்கும் தொடர்பே இல்லாத ஒரு விளம்பரத்தில் மோகன்லால் ராட்டையை பயன்படுத்தி நடித்திருக்கிறார். இதன் மூலம் ராட்டை குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும். காதி துணிகள் என்ற பெயரில் போலி துணிகள் வியாபாரத்துக்கு வரும் ஆபத்து உள்ளது. இதையட்டி, மோகன்லாலுக்கும், கடை நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.