'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைக்கு சோஷியல் மீடியாக்களில் வெளியாகும் ஒரு புகைப்படம் கூட சாமானிய நபர் ஒருவரை ஒரேநாளில் பிரபலமாக்கி விடுகிறது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் யூனிபார்ம் அணிந்துகொண்டு மீன்விற்பது போன்ற புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது..
திருச்சூரை சேர்ந்த ஹனன் என்கிற அந்த மாணவி, குடும்ப சூழல் காரணமாக அதிகாலையிலேயே மார்க்கெட் சென்று மீன்வாங்கி வந்து விற்றுவிட்டு, அதன்பின் நீண்ட தூரத்தில் உள்ள கல்லூரிக்கு சைக்கிளில் சென்று படித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சோஷியல் மீடியாவில் பரவிய இவரது புகைப்படம் ராம்லீலா பட இயக்குனர் அருண்கோபியின் கண்களில் பட, அவர் ஹனனை சந்தித்து தற்போது மோகன்லால் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
கலாபவன் மணி உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவர் நடத்தும் மேடை நிகழ்ச்சிகளில் ஹனனுக்கு வாய்ப்பு தருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.