‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரு நடிகராக நூறு படங்கள் என்கிற மிகப்பெரிய சாதனையை சமீபத்தில் வெளியான கூடே படம் மூலம் எட்டியுள்ளார் நடிகர் பிருத்விராஜ். இந்தநிலையில், தனக்கு விருப்பமான இயக்குநர் துறையில் அடியெடுத்து வைக்க விரும்பிய பிருத்விராஜ், கடந்த வருடம் முதல் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதோ மோகன்லாலை கதாநாயகனாக வைத்து தற்போது லூசிபர் என்கிற படத்தின் ஷூட்டிங்கையும் நேற்றுமுதல் துவங்கிவிட்டார்.
முதல்நாளன்று சேறும் சகதியுமாக இருந்த படப்பிடிப்பு தளத்திற்கு காரில் வராமல் ஆட்டோவில் வந்திறங்கி படக்குழுவினரை ஆச்சரியப்படுத்திய பிருத்விராஜ், மோகன்லால் நடித்த மழைக்காட்சியை திருவனந்தபுரம் பகுதியில் படமாக்கியுள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் கொண்ட இந்தப்படத்தை ஆசீர்வாத சினிமாஸ் சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.