தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் முன்னணி நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நடிகர், நடிகைகள் இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். நடிகர் திலீப்புக்கு ஆதராவாக ஒரு அணியினரும், எதிராக ஒரு அணியினரும் இருக்கிறார்கள். அடிக்கடி கருத்துக்களாலும், அறிக்கைகளாலும் மோதி வருகிறார்கள்.
நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகை மம்தா மோகன்தாஸ், “பாலியல் ரீதியாக நடிகைகள் பாதிக்கப்படுவதற்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் உருவாக்கி கொள்வதாக கருதுகிறேன். இந்த பிரச்சினையில் நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது” என்றார். இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து ரீமா கலிங்கல் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ பெண்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் சமூகமும் பொறுப்பு ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களை நீங்கள் அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது. என்று கூறினார்.
ரீமாவின் கருத்துக்கு மம்தா சொன்ன எதிர் கருத்து வருமாறு: எனது கருத்தை தவறாக புரிந்துள்ளனர். பெண்ணோ சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு இருக்கிறது என்று நான் சொன்னது எனது சொந்த கருத்து. சினிமா பிரபலங்களுக்கு குரல் கொடுப்பதுபோல் சாதாரண பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பது இல்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். என்றார். மம்தாவுக்கு ஆதரவாக சிலரும், ரீமாவுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள்.