'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்திற்குப் பிறகு தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு 'என்டிஆர்' என்ற பெயரிலேயே படமாகி வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் என்டிஆர் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத்திற்கு வந்த வித்யா பாலனை, என்டிஆர் குடும்பத்தினர் வரவேற்று சிறப்பித்தனர். அவருக்கு புடவை ஒன்றையும் பரிசாக அளித்தனர். அந்த நிகழ்வில் பாலகிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் என்டிஆர் மூத்த மகள் லோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்டிஆர் குடும்பத்தினரிடம் தான் நடிக்கவிருக்கும் நிஜக் கதாபாத்திரமான பசவதாரகம் பற்றியும் அவர்களிடமிருந்து வித்யா பாலன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் வித்யா பாலன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.