டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகர்களில் தங்களது படத்தின் 2-ஆம் பாகங்களில் அதிகம் நடிப்பவர் யாரென்றால் அது நடிகர் ஜெயசூர்யா தான். அந்த வகையில் கடந்த 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது,
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'ஆடு; ஒரு பீகர ஜீவியானு படம் சுமாரான வெற்றி பெற்றாலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் செய்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் 2016ல் ஜெயசூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பிரேதம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளார்கள்.
முதல் பாகத்தில் டான் பாஸ்கோ என்கிற மனநல மருத்துவராக நடித்திருந்த ஜெயசூர்யா, ஆவியாக அலையும் கல்லூரி மாணவிக்கு தனது விசாரணை மூலம் ஜெயசூர்யா நீதி வாங்கித்தரும் விதமாக கதை அமைந்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் ஜெயசூர்யாவின் கேரக்டரை இன்னும் டெவலப் செய்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர்.. ஆம்.. ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான அதே ரஞ்சித் ஷங்கர் தான்...