'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மலையாள திரையுலகில் ரொம்பவே பிரபலமான இயக்குனர்கள் தான் ஷபியும் மற்றும் அவரது சகோதரரான ரபி மெக்கார்டின் இருவரும். இவர்கள் பெயர்களும் ஒருவரது படத்தில் இன்னொருவர் உதவியாக பணியாற்றுவதுமாக இருப்பதாலும், கிட்டத்தட்ட ஒரேபோன்று உருவ ஒற்றுமை இருப்பதாலும் இவர்களை ஆரம்பத்தில் சந்திப்பவர்கள் சற்றே குழம்பித்தான் போவார்கள்..
இப்படி ஒரு குழப்பத்தில் தான் பிசாசு நாயகி பிரயாகா மார்ட்டினும் சிக்கினாராம். ராம்லீலா படத்தில் நாயகியாக நடித்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய ஷபியை அவரது சகோதரர் ரபி என நினைத்துக் கொண்டு அவர் தொடர்பான கேள்விகளாக கேட்டாராம் பிரயாகா. ஷபியும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பதில் சொல்வாராம். ஒருகட்டத்தில் திலீப் வந்து உண்மையை சொன்னபின் தான் பிரயாகாவிற்கு தன்னுடைய தவறு தெரியவந்ததாம்.
ராம்லீலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு பழைய பாம் கதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். இயக்குனர் ஷபி தான் இந்தப்படத்தை இயக்கிவருகிறார்.