பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் பெண் இயக்குனர்கள் நுழைவதே அரிதான விஷயம். அதிலும் ரசிகர்கள் விரும்பும் வெற்றிப்படங்களை கொடுத்து சாதிப்பது இன்னும் கஷ்டம்.. ஆனால் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் பெங்களூர் டேய்ஸ் படம் மூலம் ரசிகர்களை வசியம் செய்தவர். ஏற்கனவே மஞ்சாடிக்குரு, அடுத்ததாக பெங்களூர் டேய்ஸ் படங்களை இயக்கிய இவரது டைரக்சனில் மூன்றாவது படமாக தற்போது கூடே என்கிற படம் இந்தவாரம் ரிலீஸாகியுள்ளது.
பிருத்விராஜ் - பார்வதி - நஸ்ரியா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அஞ்சலி மேனன் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் முன்னணி நடிகர்கள் அவரது டைரக்சனில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். இருந்தாலும் சரியான கதை அமைந்துவிட்டால் மோகன்லால், மம்முட்டி படங்களை இயங்குவதே தனது விருப்பம் என கூறியுள்ளார் அஞ்சலி மேனன்.