'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மலையாள திரையுலகில் தற்போது மோகன்லால், மம்முட்டி, திலீப் என சீனியர் நடிகர்களும் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி என ஜூனியர் முன்னணி நடிகர்களும் இருந்தாலும், இந்த இரண்டு லிஸ்டிலும் சேராதவர், அல்லது இரண்டு லிஸ்ட்டுக்கும் பொதுவானவர் என்றால் அது நடிகர் பிருத்விராஜ் மட்டும் தான். நேற்று வெளியாகியுள்ள கூடே திரைப்படம் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 100வது படமாகும். இந்த கணக்கில் மலையாளம் மட்டுமல்லாமல், தமிழி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களும் அடங்கும்.
மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் இளைய மகனான பிருத்விராஜ் 2002ல் வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும், தனது திறமையாலும், வித்தியாசமான கதை தேர்வினாலும் படிப்படியாக முன்னணி நடிகராக மாறியவர். கமர்ஷியல் அம்சங்களை விட கதையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.
கடந்த இரண்டு வருடங்களாக பெரிய வெற்றி என எதையும் பாக்காத பிருத்விராஜுக்கு அஞ்சலி மேனன் டைரக்சனில் தற்போது அவரது 100வது படமாக வெளியாகியுள்ள கூடே படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பு உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.
தற்போது மோகன்லால் நடிக்கும் லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள பிருத்விராஜ் தனது 100வது படத்தை முடித்தபின்பே டைரக்ஷன் துறையில் கால்பதிக்க இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய சிறப்பம்சம்..