அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீப காலமாக தமிழ், தெலுங்கு அப்படியே மலையாளம் என கொழுந்துவிட்டு எரியும் விவகாரம் காஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் தான். அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஸ்ரீரெட்டி என்கிற நடிகை இந்த விவகாரத்தில் பிரபல நடிகர்கள், இயக்குனர்களை எல்லாம் சந்தியில் இழுத்துவிட்டு வருகிறார்.
இந்தநிலையில் மலையாள திரையுலகை சேர்ந்த நவஜித் நாராயணன் என்பவர் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த காஸ்டிங் கவுச் பிரச்சனை இருக்கிறது என ஒரு குண்டை வெடித்துளார். இயக்குனர் கமல் இயக்கிய ஆமி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர், ஒருமுறை வாய்ப்பு தேடி ஒரு இயக்குனரின் வீட்டுக்கு சென்றாராம்.அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர், பதிலுக்கு கைமாறாக நீ என்ன தருவாய் என கேட்டு அந்த நடிகரின் தொடை மேல் கைவைத்தாராம்.
தனக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறியும் அவர் கையை எடுக்காமல் போகவே, அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாராம் நவஜித்.. அந்த இயக்குனர் ஒருவகையில் தனது குடும்ப நண்பர் என்பதால் அவர் பெயரை சொல்லி அவரது குடும்பத்தினருக்கு அவமானம் தேடித்தர விரும்பவில்லை என கூறியுள்ளார் நவஜித் .