ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரையுலகில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடிகர் சங்கமான அம்மா-வில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் மோகன்லாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எங்களுக்கு பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இருவரின் விலகல் கடிதம் தான் கிடைத்துள்ளது என கூறியிருந்தார்.
இதை கவனித்த சினிமா பெண்கள் நல அமைப்பினர், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகளும் ஈ மெயிலில் தங்களது விலகல் கடிதத்தை அனுப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்ல தாங்கள் சங்கத்தில் இருந்து விலகியதை மீடியா மூலமாக அறிவித்தும் விட்டார்கள். இதுவரை மோகன்லால் மெயில் செக் பண்ணாமல் தான் பேட்டி கொடுத்தாரா என கிண்டலாக கேட்டுள்ளார்கள்.