டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடிகர் சங்கமான அம்மா-வில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் மோகன்லாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எங்களுக்கு பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இருவரின் விலகல் கடிதம் தான் கிடைத்துள்ளது என கூறியிருந்தார்.
இதை கவனித்த சினிமா பெண்கள் நல அமைப்பினர், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகளும் ஈ மெயிலில் தங்களது விலகல் கடிதத்தை அனுப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்ல தாங்கள் சங்கத்தில் இருந்து விலகியதை மீடியா மூலமாக அறிவித்தும் விட்டார்கள். இதுவரை மோகன்லால் மெயில் செக் பண்ணாமல் தான் பேட்டி கொடுத்தாரா என கிண்டலாக கேட்டுள்ளார்கள்.