தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பார்வதியை பொறுத்தவரை தன் மனதில் பட்ட கருத்துக்களை அது சரியா தவறா என கூட பார்க்காமல் பளிச்சென பேசி விடுவார். இதனாலேயே சர்ச்சை நடிகைகள் பட்டியலில் நடிகை ரீமா கல்லிங்கலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது, முக்கிய பொறுப்புக்கு தான் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் ஒரு சிலரால் தான் தடுக்கப்பட்டதாகவும் அவ்வப்போது சில பேட்டிகளில் கூறி வந்தார் பார்வதி.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லாலிடம் பார்வதி கூறியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், பார்வதியை போட்டியிட வேண்டாம் என யார் தடுத்தது..? நான் இதை நம்பவில்லை.. அது உண்மையாக இருந்தால், சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு, தன்னை யார் தடுத்தார்கள் என்பதை அவர் தைரியமாக கூறியிருக்கலாமே..? எங்களில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து விலகி இருப்போமே.. இப்போதும் கூட பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்" என சற்று காட்டமாக கூறியுள்ளார் மோகன்லால்.