ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அபிமன்யு என்பவர் சமீபத்தில் மாணவர்கள் அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இது கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இடுக்கியில் உள்ள அந்த மாணவரின் வீட்டிற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பியுமான சுரேஷ்கோபி துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றார்.
ஆனால் அதன்பின் அவர் செய்த செயல் தான் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.. தான் துக்கம் விசாரிக்க சென்றுள்ளோம் என்பதையும் மறந்து அங்கே கூடியிருந்தவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக் கொண்டார் சுரேஷ்கோபி. மற்றவர்கள் எடுத்த செல்பியில் இவர் இடம்பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. இவரே மற்ற அனைவரையும் சேர்த்து செல்பி எடுத்திருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோஷியல் மீடியாவில் சுரேஷ்கோபியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பகுதிக்கு தனது சொகுசு காரில் சென்ற சுரேஷ்கோபி, அதை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்தது ஒரு ஆட்டோவில் பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டுக்கு சென்றதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி, தனது எம்பி தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு உதவும் விதமாக மாணவரின் பெயரால் அபிமன்யு குடிதண்ணீர் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.