ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
சமீபத்தில் கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அபிமன்யு என்பவர் சமீபத்தில் மாணவர்கள் அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இது கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இடுக்கியில் உள்ள அந்த மாணவரின் வீட்டிற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பியுமான சுரேஷ்கோபி துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றார்.
ஆனால் அதன்பின் அவர் செய்த செயல் தான் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.. தான் துக்கம் விசாரிக்க சென்றுள்ளோம் என்பதையும் மறந்து அங்கே கூடியிருந்தவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக் கொண்டார் சுரேஷ்கோபி. மற்றவர்கள் எடுத்த செல்பியில் இவர் இடம்பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. இவரே மற்ற அனைவரையும் சேர்த்து செல்பி எடுத்திருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோஷியல் மீடியாவில் சுரேஷ்கோபியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பகுதிக்கு தனது சொகுசு காரில் சென்ற சுரேஷ்கோபி, அதை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்தது ஒரு ஆட்டோவில் பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டுக்கு சென்றதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி, தனது எம்பி தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு உதவும் விதமாக மாணவரின் பெயரால் அபிமன்யு குடிதண்ணீர் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.