ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் முதன்மையான ஹீரோவாக இருந்தாலும் இத்தனை வருடங்களில் தற்போது தான் மலையாள நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுளார் நடிகர் மோகன்லால். அவர் தலைவராக பொறுப்பேற்ற முதல் பொதுக்குழுவிலேயே, நடிகர் சங்கத்தில் ஏற்கனவே விலக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை எழுப்பியது.
இந்தநிலையில் சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில், "திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது என்பது நடிகர் சங்கத்திலுள்ள அனைவரும் ஒருமித்தமாக எடுத்த முடிவு என்றாலும், திலீப்பிற்கு சங்கத்திற்குள் மீண்டும் நுழைய விருப்பமில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
மேலும், "சினிமா பெண்கள் நல அமைப்பினர் மீண்டும் நடிகர் சங்க நிர்வாகக்குழு கூட்ட வேண்டும் என வைத்த கோரிக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதுமட்டுமல்ல நடிகர் சங்க நிர்வாகத்தில் பல விதிகளை மாற்ற அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன் வகுக்கப்பட்ட விதிகள் 25 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. அதை இந்த காலத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக இந்த சங்கத்தில் பெண்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் தரப்படும் விதமாக மாற்றப்பட வேண்டும்" என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.