பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள திரையுலகில் பிருத்விராஜ் - இந்திரஜித் சகோதரர்கள் தனித்தனி ஹீரோக்களாக தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்கள். அவ்வப்போது நல்ல ஸ்க்ரிப்ட் கிடைக்கும் போது இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவும் செய்கிறார்கள். அப்படி இதுவரை 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த முறை ஒரு மாற்றமாக பிருத்விராஜ், முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் லூசிபர் படத்தில் இந்திரஜித்தும் நடிக்கவுள்ளார்.
மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் நடிகருமான முரளி கோபி கதை எழுதியுள்ளார். இவரும் இந்திரஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கான கேரக்டரில் வலுவான அம்சங்களை சேர்த்து கதை எழுதியுள்ளாராம். மோகன்லாலுடன் பாபா கல்யாணி, ரசம் உள்ளிட்ட சில படங்களில் இந்திரஜித் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் இந்திரஜித் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.