‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலக்காட்டு தமிழ் பொண்ணு வித்யாபாலன். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. வித்யா பாலன் சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆடிசன் வரைக்கும் வந்து நிராகரிக்கப்பட்டவர். மேலும் சில கசப்பான அனுபவங்களும் வித்யா பாலனுக்கு உண்டு. அதனால் தமிழ் படங்கள் என்றாலே அவருக்கு அலர்ஜியாக இருந்தது.
கமலுடன் தசாவதாரம், விஸ்வரூபம், ரஜினியுடன் கபாலி, காலா படங்களுக்கு பேசப்பட்டார். பெரும் தொகை சம்பளமாக கொடுக்க முன்வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டார். ஆனால் தற்போது தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது தாயாக அதாவது என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் அம்மாள் கேரக்டரில் நடிக்கிறார் வித்யா பாலன். இதில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளம் என்றபோதும் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தாலேயே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை நன்றாக உணர்ந்து நடிக்ககூடிய வித்யாபாலன், தற்போது பசுவதாரகம் அம்மாள் கேரக்டர் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து அவருடைய வீடியோக்களை பார்த்து தனது கேரக்டருக்கு பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்புக் கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பேசப்படுகிறது.