நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கமல். இவர் தற்போது மலையாள சினிமா நடிகர் சங்க உறுப்பினர்களை பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறி பிரச்னையில் சிக்கியுள்ளார். நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம், களேபரத்தில் இருப்பது தெரிந்ததுதான். இந்த சமயத்தில் இயக்குனர் கமல், மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் 500 பேர்களில் 450 பேர் வெறுமனே உதவித்தொகை உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்காகவே சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தற்போதைய சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது சீனியர் நடிகர்களான மது, ஜனார்த்தனன், கேபிஏ.சி லலிதா மற்றும் கவியூர் பொன்னம்மா போன்ற சீனியர் நடிகர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இதனால் கோவமான அவர்கள், இயக்குனர் கமல் தங்களை பற்றி அவதூறாக கருத்து கூறியதாக கலைத்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் தாங்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடிப்பதாகவும், தற்போது நடித்து கொண்டிருப்பதாகவும், நடிகர் சங்கத்தில் இருந்து வரும் உதவித்தொகை என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது நடிகர் சங்கம் தங்கள் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடு என்றே கருதுகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில முன்னணி நடிகர்களும், இயக்குனர் கமல் கூறியதை ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.